கடலோர மக்களின் வாழ்வாதார உரிமைக்கான கருத்தரங்கு
புதுச்சேரி, மார்ச் 21: புதுச்சேரி ஹோப் நிறுவனம் சார்பில் கடலோர மக்களின் வாழ்வாதார உரிமைக்கான கருத்தரங்கு ஆனந்தா இன்-னில் இன்று (21.3.09) நடைபெற்றது.
புதுச்சேரி மாநில மீனவர் அமைப்புகளின் கூட்டு நடவடிக்கைக் குழு அமைப்பாளர், முன்னாள் எம்.எல்.ஏ. மா. இளங்கோ தலைமை வகித்தார். ஹோப் இயக்குநர் ஜோசப் விக்டர் ராஜ் முன்னிலை வகித்தார்.
கடலோர மக்களின் வாழ்வாதார உரிமைக் குறித்த சுவரொட்டியை புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஏ.வி.சுப்ரமனியன் வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார்.
கடற்கரை மண்டல மேலாண்மை அறிவிக்கையை எதிர்த்து ஹோப் நிறுவனத்துடன் இணைந்து கடலோர கிராம மக்கள் நடத்திய போராட்டங்கள், கடிதப் பிரச்சாரம் மற்றும் பொது விசாரனை ஆகியவற்றை கடலோர கிராம உள்ளாட்சி தலைவர்கள், கடலோர கிராம பஞ்சாயத்து தலைவர்கள, கடலோர சமுதாய அமைப்பு தலைவர்கள் மதிப்பீடு செய்தனர். எதிர்காலத்தில் சுனாமி வீடுகள் கட்டுவதை துரிதப்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை விமலா வரவேற்றார். மல்லிகா நன்றி கூறினர்.
கவிஞர் வாணிதாசன் நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு அமைச்சர் கந்தசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
